ஓம் ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் ஓம் ஓம் பராசக்தி ஓம்
ஓம் ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் ஓம் ஓம் பராசக்தி ஓம்
ஆயிரம் கண்ணுடையாள்
எங்கள் அபிராமி
அடைக்கலம் நமக்கு
அளிப்பாள் சிவகாமி
நோய் நொடி தீர்த்திடுவாள்
எங்கள் கருமாரி
வறுமை அகற்றிடுவாள்
எங்கள் மகமாயி
துக்கம் துயர் களைவாள்
எங்கள் துர்க்கை அம்மா
பயத்தை போக்கிடுவாள்
பத்ரகாளி அம்மா
செல்வங்கள் வழங்கிடுவாள்
சவுந்தரநாயகி அம்மா
மாங்கல்யம் காத்திடுவாள்
அங்காள மாரியம்மா
சித்தி தந்திடுவாள் சிம்ம வாகினி
புத்தி அளித்திடுவாள்
பராசக்தி அம்மா
சௌந்தர்யம் அளிப்பவளே
சுந்தரவள்ளி அம்மா
சுகங்கள் நமக்களிப்பாள்
அம்பிகை அம்மா
ஆயிரம் கண்ணுடையாள்
எங்கள் அபிராமி
அடைக்கலம் நமக்கு
அளிப்பாள் சிவகாமி
நோய் நொடி தீர்த்திடுவாள்
எங்கள் கருமாரி
வறுமை அகற்றிடுவாள்
எங்கள் மகமாயி
பசியினை போக்கிடுவாள்
அமுத நாயகி அம்மா
குங்குமம் காத்திடுவாள்
செந்தூர நாயகி அம்மா
மனதினை ஆட்சி செய்யும்
மதுரை மீனாட்சி அம்மா
மக்களை வாழ வைப்பாள்
காஞ்சி காமாட்சி அம்மா
பரமனுக்கு பாடம் சொன்னவள்
பார்வதி அம்மா
ஊழ்வினை அகற்றிடுவாள்
கோவை கோனியம்மா
கொங்கு நகரை வாழ வைக்கும்
பண்ணாரி மாரியம்மா
கோவையின் குல தெய்வம்
தண்டு மாரியம்மா
கோவையின் குல தெய்வம்
எங்கள் தண்டு மாரியம்மா
தண்டு மாரியம்மா! அம்மா!
ஆயிரம் கண்ணுடையாள்
எங்கள் அபிராமி
அடைக்கலம் நமக்கு
அளிப்பாள் சிவகாமி
நோய் நொடி தீர்த்திடுவாள்
எங்கள் கருமாரி
வறுமை அகற்றிடுவாள்
எங்கள் மகமாயி
ஓம் ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் ஓம் ஓம் பராசக்தி ஓம்