ஆணை முகத்தானே !
ஐந்து கரத்தானே !
அருள் மழை பொழியும்
ஆறுமுகன் சோதரனே...
பாதி தந்தத்தால் மகா
பாரதம் தந்தவனே !
பார்வதி உமையாள்
பார்வையில் உதித்தவனே !
தொடக்கம் உன்னில் என்றால்
தடங்கல் ஏதுமில்லை !
தொடர்ந்திட பயமும்
துயரமும் எவர்க்குமில்லை !
ஆணை முகத்தானே !
ஐந்து கரத்தானே !
அருள் மழை பொழியும்
ஆறுமுகன் சோதரனே...
வினைகளின் அதிபதி
விநாயகரின் காலடி
விழுந்து வணங்கிட
விலகிடும் பிணி இனி!
ஏகமும் நீ ஆக! பழ முழு
பாகமும் உனக்கென்றாய்..
அகத்தில் ஆணவத்தை
கணத்தில் அழித்திட்டாய் ..
ஆணை முகத்தானே !
ஐந்து கரத்தானே !
அருள் மழை பொழியும்
ஆறுமுகன் சோதரனே...