கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா
அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி
அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே